23 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை;தமிழ்நாட்டில் 42 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-13 15:20 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 42 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 19 ஆண்கள் மற்றும் 23 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக கோவையில் 5 பேருக்கும், சென்னையில் 5 பேருக்கும், கன்னியாகுமரியில் 3 பேருக்கும் வெளிநாட்டு பயணிகள் 4 பேர் உள்பட மொத்தம் 18 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 97 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 528 ஆக உள்ளது.நேற்று தமிழ் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு எதுவும் இல்லை.மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்