வீட்டு கதவை உடைத்து நகை திருட்டு

வீட்டு கதவை உடைத்து நகை திருடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-24 18:45 GMT

செஞ்சி,

செஞ்சி அருகே கம்மந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி ரம்யா (வயது 25). சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டுவிட்டு வெளியே சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ஒரு பவுன் நகை, 400 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்