பள்ளிக்கூடத்தில் திருட்டு

பள்ளிக்கூடத்தில் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-07-03 19:50 GMT

திசையன்விளை:

திசையன்விளை அருகே குமாரபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வன் (வயது 35), அரசு ஒப்பந்தகாரர். குமாரபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. அதற்காக வாங்கி வைத்து இருந்த 20 இரும்பு சீட்டுகளை குமாரபுரம் மேலதெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் (35) என்பவர் திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வன் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து, பாலகிருஷ்ணனை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்