தீர்த்தக்குடம் ஊர்வலம்

சிவகிரியில் கோவில் வருசாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது.

Update: 2023-06-30 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி பஸ்நிலையம் அருகே உள்ள சேனை விநாயகர் கோவில் வருசாபிஷேக விழாவை முன்னிட்டு மதுரை அருகே உள்ள பழமுதிர்சோலையில் உள்ள நீர்வீழ்ச்சி பகுதியில் இருந்தும், சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பாக அமைந்துள்ள தெப்பத்தில் இருந்தும், தேவிபட்டணம் காளியம்மன் கோவில் தாமரைக்குளத்தில் இருந்தும் தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர் தென்காசி பழைய போலீஸ் நிலையம் அருகே உள்ள சக்கரவர்த்தி விநாயகர் கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து சக்கரவர்த்தி விநாயகர் கோவிலில் இருந்தும், சேனை விநாயகர் கோவிலில் இருந்தும் தீர்த்தக்குடங்களை நூற்றுக்கணக்கான பெண்கள், சிறுவர்கள் மேளதாளங்கள் முழங்க அக்ரஹாரம் தெரு, காந்தி ரோடு மற்றும் முக்கிய ரதவீதிகள் வழியாக வலம் வந்து சேனை விநாயகர் கோவிலை அடைந்தனர். அங்கு தீர்த்தத்தை வைத்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்