தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம் ஆனார்

Update: 2022-11-16 19:16 GMT

கரூர் மாவட்டம், பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் உள்ள கவுண்டாத்தாள் தெரு கடைவீதியை சேர்ந்தவர் ரவி (வயது 52). இவர் நெரூர் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவரது பண்ணையில் சமையல் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி தேதி தனது மகள் திருமணத்திற்கு வந்து விட்டு திருமணம் முடிந்ததும் கடந்த 2-ந்தேதி நெரூர் பகுதிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் ரவி பண்ணைக்கு செல்லாமல் அன்று முதலே காணவில்லை. இதையடுத்து அவரது மனைவி மகேஸ்வரி உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மகேஸ்வரி கொடுத்தபுகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்