கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள வாடிகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி மகன் மனோஜ் (வயது 37). தச்சு தொழிலாளியான இவருக்கு கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊர் அருகே உள்ள கிணற்றில் குதித்து மனோஜ் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் மனோஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.