கன்னியாகுமரிக்கு வந்த மொரிஷியஸ் நாட்டு ஜனாதிபதி

2 நாள் சுற்றுப்பயணமாக மொரிஷியஸ் நாட்டு ஜனாதிபதி பிருத்விராஜ் சிங் ரூபன் நேற்று கன்னியாகுமரி வந்தார். அங்கு அவர் சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்தார்.

Update: 2023-05-17 21:23 GMT

தென்தாமரைகுளம்:

2 நாள் சுற்றுப்பயணமாக மொரிஷியஸ் நாட்டு ஜனாதிபதி பிருத்விராஜ் சிங் ரூபன் நேற்று கன்னியாகுமரி வந்தார். அங்கு அவர் சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்தார்.

மொரிஷியஸ் நாட்டு ஜனாதிபதி

மொரிஷியஸ் நாட்டு ஜனாதிபதி பிருத்விராஜ் சிங் ரூபன். இவர் தனது மனைவி சயுக்தா ரூபன் மற்றும் அந்த நாட்டு பிரதமர் பிரவிந்த் ஜக்நாதின் தாயார் சரோஜினியுடன் நேற்று 2 நாள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரி வந்தார்.

அங்கு பிருத்விராஜ் சிங் ரூபனை, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அவர் விடுதியில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

பின்னர் மாலை 6 மணிக்கு கார் மூலம் கோவளம் பகுதி கடற்கரைக்கு சென்று சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்தார்.

விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுகிறார்

இன்று (வியாழக்கிழமை) காலையில் முக்கடல் சங்கமம் பகுதிக்கு சென்று சூரிய உதய காட்சியை கண்டு ரசிக்கிறார்.

தொடர்ந்து பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிடுகிறார். மொரிஷியஸ் நாட்டு ஜனாதிபதி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்