விவசாயி அடித்துக் கொலை

கள்ளக்குறிச்சி அருகே திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் விவசாயியை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-07-26 17:40 GMT

கள்ளக்குறிச்சி

விவசாயி

கள்ளக்குறிச்சி அருகே உள்ள க.மாமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 57), விவசாயி. இவரது மகன் பாலகிருஷ்ணன்(27). பி.காம் படித்துள்ள இவர் வேலை இன்றி வீட்டில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் பாலகிருஷ்ணன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவரை பழனிவேல் கண்டித்ததாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் தனக்கு ஏன்? இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை என்று கூறி திட்டியபடி அருகில் கிடந்த இரும்பு குழாயால் பழனிவேலுவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் தரையில் சுருண்டு விழுந்தார்.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பழனிவேலுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

கைது

இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் க.மாமந்தூா் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்