லாரி மோதி வாலிபர் பலி; பெண் படுகாயம்

லாரி மோதி வாலிபர் பலியானார். பெண் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-11-04 20:03 GMT

திருச்சி திருவாசி மான்பிடிமங்கலம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் பிரசன்னா(வயது 27). இவர் சம்பவத்தன்று தனது சகோதரி மோனிகா(25) என்பவருடன் திருச்சி ஓயாமாரி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி பிரசன்னா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளில் மோதியது. இந்த விபத்தில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரசன்னா இறந்தார். பலத்த காயம் அடைந்த மோனிகா சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மோனிகா கொடுத்த புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்