விஷம் குடித்து வாலிபர் தற்கொலை முயற்சி

நெல்லையில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

Update: 2023-10-22 19:00 GMT

நெல்லை டவுன் பாஸ்கர தொண்டைமான் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் பிரதீப் (வயது 26). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வீர லட்சுமி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவரது மனைவிக்கும், இவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வீரலட்சுமி டவுன் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் போலீசார், பிரதீப்பை வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவரை போலீசார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமடைந்த பிரதீப், வயல் தெரு பகுதியில் விஷத்தை குடித்து மயங்கி விட்டார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு சென்று பிரதீப்பை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நெல்லை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். விஷம் குடித்த பிரதீப்பின் தாய் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

Tags:    

மேலும் செய்திகள்