இளம்பெண் திடீர் மாயம்

கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் திடீர் மாயம் போலீஸ் விசாரணை

Update: 2022-06-22 17:35 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே பொற்ப்படாக்குறிச்சி வானவில் நகரை சேர்ந்தவர் சைமன்ஆனந்த் மனைவி பவுலின் நினிஷா(வயது 21). சம்பவத்தன்று வீ்ட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சைமன் ஆனந்த் அக்கம்பக்கத்து மற்றும் உறவினர் வீடுகளில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் அவரை காணாததால் இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சைமன்ராஜ் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்