நன்னடத்தை பிணையை மீறிய வாலிபருக்கு சிறை

சிவகிரியில் நன்னடத்தை பிணையை மீறிய வாலிபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-02-13 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி சித்தி விநாயகர் கோவில் நடுத்தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 27). இவர் மீது சிவகிரி கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர் மதுபோதையில் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் தகராறு செய்து வந்தார். இதையடுத்து போலீசார், கணேசனை பிடித்து சங்கரன்கோவில் உதவி கலெக்டர் சுப்புலட்சுமி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து கணேசனிடம் 1 வருடத்திற்கான நன்னடத்தை பிணையாணை பெறப்பட்டது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிவகிரியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடம் கணேசன் தகராறு செய்து அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து நன்னடத்தை பிணையை மீறியதாக வருகிற நவம்பர் மாதம் 24-ந் தேதி வரை சிறையில் அடைக்க உதவி கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்