தவ்ஹீத் ஜமாத் பொதுக்குழு கூட்டம்

மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாத் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-22 19:30 GMT

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலப்பாளையம் மஸ்ஜிதுல் அக்ஸா கிளையின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மஸ்வூத் உஸ்மானி தலைமை தாங்கி பேசினார்.

கூட்டத்தில், மேலப்பாளையம் பிறைநகர் பகுதியில் சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, போதிய மின்சார வசதி செய்து தர வேண்டும். மேலப்பாளையம் அண்ணா வீதி, வாய்க்கால் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் அதிக அளவில் சாலை சுற்றி திரிகின்றன. இந்த மாடுகளை உடனே பிடிக்க வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடைபெறுகின்ற போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட காலமாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறை கைதிகளை கருணை அடிப்படையில் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags:    

மேலும் செய்திகள்