அண்ணா, பெரியார் பிறந்த நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி - தமிழக அரசு அறிவிப்பு

அண்ணா, பெரியார் பிறந்த நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-09-12 21:14 GMT

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-2022-ம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, அண்ணா, பெரியார் பிறந்த நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடைபெறுகிறது.

அண்ணா பிறந்தநாளான வருகிற 15-ந்தேதி நடைபெறும் போட்டி:

பள்ளி மாணவர்கள்

கல்லூரி மாணவர்கள்

1. தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன்

1.அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும்

2. மாணவர்களுக்கு அண்ணா

2.அண்ணாவின் மனிதநேயம்

3. அண்ணாவின் மேடைத்தமிழ்

3.அண்ணாவின் தமிழ் வளம்

4. அண்ணா வழியில் அயராது உயரும்!

4.அண்ணாவும் தமிழ் சமுதாயமும்

5. அண்ணாவின் வாழ்விலே 

5.அண்ணாவின் அடிச்சுவட்டில்

மேலும், பெரியார் பிறந்தநாளான வருகிற 17-ந்தேதி நடைபெறும் போட்டி:

பள்ளி மாணவர்கள்

கல்லூரி மாணவர்கள்

1.பெண்ணடிமை தீருமட்டும்

1.பெண் ஏன் அடிமையானாள்?

2.தந்தை பெரியாரின் வாழ்க்கையிலே

2.இனிவரும் உலகம்

3.தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள்

3.சமுதாய விஞ்ஞானி பெரியார்

4.பெரியாரின் உலக நோக்கு 

4.உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும்

5.பெரியார் காண விரும்பிய சமூகநீதி

6.மூட நம்பிக்கை ஒழிப்பில் தந்தை பெரியார் 

மேற்கண்ட தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகின்றன. வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முறையே முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மேலும் சிறப்பு பரிசாக அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்