கோடை விடுமுறை: தாம்பரம் - மங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

தாம்பரம் - மங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2024-06-05 03:01 GMT

சென்னை,

கோடைவிடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரம் - மங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாம்பரத்தில் இருந்து வருகிற 6, 9, 14, 16, 21, 23, 28, 30 ஆகிய தேதிகளில் (வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமை) மதியம் 1.55 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06047) மறுநாள் காலை 6.55 கர்நாடக மாநிலம் மங்களூரு சென்றடையும்.

மறுமார்க்கமாக, மங்களூருவில் இருந்து வருகிற 8, 10, 15, 17, 22, 24, 29 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் (சனி மற்றும் திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு புறப்பட்டு வரும் சிறப்பு ரெயில் (06048) மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்