தர்மபுரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில்பெண் உள்பட 2 பேர் தற்கொலை

Update: 2022-12-22 18:45 GMT

தர்மபுரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தொழிலாளி

தர்மபுரி மாவட்டம் பங்கு நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி (வயது 80). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜி உயிரிழந்தார். இதுதொடர்பாக இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்

மோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (52). உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் தூக்கப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்