சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

கிருஷ்ணகிரியில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-27 18:45 GMT

கிருஷ்ணகிரியில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டம்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சந்திராச்சாரி, கல்யாணசுந்தரம், தனலட்சுமி, மணி, வெண்ணிலா, வெங்கடரத்தினம், குணவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில செயலாளர் ஜெயந்தி, மாநில செயலாளர் மனோன்மணி, தர்மபுரி மாவட்டதலைவர் ராஜா, முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசலு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் சத்துணவு ஊழியர்கள், சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மஞ்சுளா நன்றி கூறினார்.

பணிக்கொடை

உண்ணாவிரத போராட்டத்தில், தமிழக அரசு தேர்தல் காலவாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 60 சதவீதத்திற்கு மேல் உள்ள காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடத்த வேண்டும். சத்துணவு திட்டத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்.

சத்துணவு அமைப்பாளர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளருக்கு பணிக்கொடை ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். பணிக்காலத்தில் இயற்கை மரணமடையும் சத்துணவு ஊழியர்களின் குடும்ப ஆண் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். மாணவர்களின் உணவூட்டு செலவினம் மாதம் முதல் வாரத்தில் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அனைத்து பலன்களும் ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்