தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

வேதாரண்யம் அடுத்த ஆற்காட்டுதுறையில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.

Update: 2023-08-22 04:22 GMT

சென்னை,

வேதாரண்யம் மீனவர்கள் 7 பேர் விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற போது, நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் கம்பி, கட்டையால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வேதாரண்யம் மீனவர்கள் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 3 பைபர் படகுகளில் வந்த கொள்ளையர்கள், ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து 22 கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தி, 800 கிலோ மீன்பிடி வலை, திசை காட்டும் கருவி, செல்போன் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துச் சென்றுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது வேதாரண்யம் மீனவர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்