திருமங்கை ஆழ்வாருக்கு சிறப்பு வழிபாடு

திருநகரி, கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் திருமங்கை ஆழ்வாருக்கு சிறப்பு வழிபாடு

Update: 2023-01-01 18:45 GMT

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே திருநகரியில் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றான இந்த கோவிலில் திருமங்கை ஆழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது. நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி திருமங்கை ஆழ்வாருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக குமரவல்லி நாச்சியார் மற்றும் திருமங்கை ஆழ்வாருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்