முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-07-23 18:16 GMT

புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வளர்பிறை சஷ்டியை யொட்டி சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் நன்செய் புகழூர் சுப்பிரமணியர், பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதேபோல் வேலாயுதம்பாளையம் காகிதபுரம் குடியிருப்பில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்