ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-02-01 19:02 GMT

நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி-பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது.

வேலாயுதம்பாளையம் அருகே தோட்டக்குறிச்சி சேங்கல்மலை வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மலர் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமியை பல்லக்கில் அமர வைத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்