பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-09-23 21:30 GMT


பொள்ளாச்சி


புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.


புரட்டாசி சனிக்கிழமை


புரட்டாசி மாதம் இந்துக்களின் புனித மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த மாதம் இறைச்சி வகைகளை சாப்பிடுவதை தவிர்த்து விரதம் இருப்பார்கள். மேலும் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று புரட்டாசி சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.


இதையொட்டி பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து பெருமாளுக்கு பால், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பெண்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி விளக்கு ஏற்றி வழிபட்டனர்.


மகா சுதர்சன ஹோமம்


சோமந்துறைசித்தூரில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள்நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி மகா சுதர்சன ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதபெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


Tags:    

மேலும் செய்திகள்