தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு நடந்தது.

Update: 2022-07-21 15:36 GMT

நாகை பகுதிகளில் உள்ள சிவன் கோவிலில் நேற்று ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்மவாகன கால சம்ஹார பைரவருக்கு திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் உள்பிரகாரத்தில் உள்ள மகாகால சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி ரஜதகீரிஸ்வரர் கோவில், திருவாய்மூர் தியாகராஜசாமி கோவில் அஷ்ட பைரவர் உள்ளிட்ட கோவில்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. தகட்டூரில் உள்ள பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு யாகம் நடந்தது. முன்னதாக பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், நெய், தேன், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்