தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.3½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள்

தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.3½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-08-25 19:15 GMT

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு நேற்று பட்டுக்கூடு வரத்து வழக்கத்தை விட குறைவாக இருந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 609 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.675-க்கும், குறைந்தபட்சமாக ரூ.423-க்கும், சராசரியாக ரூ.582.27-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்து 807 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்