மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

ஆழ்வார்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டது.

Update: 2023-05-19 20:44 GMT

கடையம்:

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளம் பகுதியில் கடந்த 12-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் மற்றும் கட்டிட தொழிலாளர்களின் சங்கத்தின் கொடி கம்பம் ஆகிய இரண்டையும் மர்ம நபர்கள் அறுத்து சென்றனர். இதுகுறித்து கட்டிட தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி அப்பகுதியை சேர்ந்த முத்துக்குமார் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துக்குமாரின் அண்ணன் குமரேசனின் மோட்டார் சைக்கிளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர். இதுகுறித்து குமரேசன் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையொட்டி அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்