பரமத்திவேலூரில் லாரி மோதி ஒருவர் படுகாயம்

Update: 2023-06-08 18:45 GMT

பரமத்திவேலூர்

பரமத்திவேலூரில் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையை 40 வயதுடைய ஆண் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த மினி லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் திண்டுக்கல் மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மலயகவுண்டம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் கார்த்திக் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் சுமார் 40 வயது இருக்கலாம் எனவும், தாடியுடன் இருந்த அவர் கருப்பு நிறத்தில் சட்டை அணிந்திருந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்