ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டு்க்கல்லில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-07-12 14:17 GMT

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அமல்ராஜ், பொருளாளர் பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியின்படி 70 வயதுள்ள ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அதேபோல் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற்ற 20 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கு சிகிச்சைக்கான தொகையை திரும்ப வழங்க வேண்டும். மேலும் இறந்த ஓய்வூதியதாரர்களின் குடும்பத்துக்கு குடும்ப நலநிதி வழங்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்