மேலஅகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மீட்பு

மேலஅகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டது.

Update: 2022-09-16 19:28 GMT

ஆண்டிமடம்:

ஆண்டிமடம் விளந்தையில் உள்ள மேலஅகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் நேற்று அந்த கோவில் சொத்துக்களை கையகப்படுத்த இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் ஆண்டிமடம் விளந்தை பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ள 26 பேரில் 24 பேர் நீதிமன்றம் மூலம் பெற்ற தடை உத்தரவை காண்பித்துள்ளனர். ஆனால் தடை உத்தரவு வாங்காத நிலையில் அன்னதான கூடம், வால்பட்டறை உள்ள இடங்கள் மீட்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் செந்தமிழ்செல்வி மற்றும் வருவாய் துறையினர், காவல்துறையினர், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர்கள், திருக்கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் வால்பட்டறை மற்றும் அன்னதான கூடம் ஆகியவற்றுக்கு 'சீல்' வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்