கோட்டைப்பட்டினம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

கோட்டைப்பட்டினம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-09-29 18:50 GMT

கோட்டைப்பட்டினம்:

நாகுடி, கோட்டைப்பட்டினம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், அரசர்குளம், மாங்குடி நாகுடி, கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஆவுடையார்கோவில், மீமிசல், கரூர், பொன்பேத்தி, திருப்புனவாசல், அமரடக்கி அம்பலாவனேந்தல், கரகத்திக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின் வினியோகம் இருக்காது என்று அறந்தாங்கி மின் உதவி செயற்பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்