பெரம்பலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் வணிகவியலில் 12 பேருக்கு இடம் கிடைத்தது

பெரம்பலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் வணிகவியலில் 12 பேருக்கு இடம் கிடைத்தது. அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு இன்று (சனிக்கிழமை) கலந்தாய்வு நடக்கிறது.

Update: 2023-06-02 19:49 GMT

அரசு கல்லூரி

குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டின் இளங்கலை பட்டப்படிப்பிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு சேர்க்கைக்கான முதல் பொது கலந்தாய்வு முதல் கட்டமாக கடந்த 30-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று கலை பாடப்பிரிவுகளில் வணிகவியல் பாடப்பிரிவுக்கு கலந்தாய்வு நடந்தது. 60 இடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களில் 120 மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைப்பு விடுக்கப்பட்ட மாணவ-மாணவிகளில் குறைந்த அளவே கலந்தாய்வுக்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது.

12 பேருக்கு இடம் கிடைத்தது

மாணவர்களின் கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவை பேராசிரியர்களால் சரி பார்க்கப்பட்டது. கலந்தாய்வில் வணிகவியல் பாடப்பிரிவில் 12 மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே இடம் கிடைத்தது. இன்று (சனிக்கிழமை) அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், வருகிற 6-ந்தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் இணையதள விண்ணப்ப நகல், மாற்றுச்சான்றிதழ், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்ப படிவ நகல், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் கல்லூரிக்கு 9.30 மணிக்குள் வர வேண்டும், என்று கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்