தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை

தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை;

Update:2022-12-11 01:02 IST

தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை கண்ணுதோப்பு காட்டுப்பகுதியில் மரத்தில் அழுகிய நிலையில் தூக்கில் பெண் பிணம் இருந்தது. இதனை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து விட்டு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அவர் கண்ணுத்தோப்பு பகுதியை சேர்ந்த பழனிவேல் மனைவி அஞ்சம்மாள் (வயது 68) என்பதும், குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்