மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மயிலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-04-12 18:45 GMT

மயிலம், 

மயிலம் அருகே சிங்கனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி (வயது 77). இவர் அதே பகுதியில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்