நவராத்திரி இசை விழா

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இசை விழா நடைபெற்றது.

Update: 2023-10-20 18:18 GMT

நெமிலி பாலா பீடத்தில் நேற்று நவராத்திரி விழா நடைபெற்றது. சினிமா பின்னணி பாடகர்கள், இசையமைப்பாளர்கள் கலந்து கொண்டு இசைநிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சிக்கு பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி தலைமை தாங்கினார். மறுமலர்ச்சி படத்தில் நன்றி சொல்ல உனக்கு என்ற பாடலை பாடிய அம்ருதாவுக்கு பாலா பீடத்தின் சார்பாக பாலரத்னா பட்டம் வழங்கப்பட்டது. திரைப்பட பின்னணி பாடகர்கள் மது தேவா, கண்ணன், பின்னணி பாடகி சுதா ஆனந்த், இசையமைப்பாளர் ரஜினி ஆகியோர் இன்னிசை வழங்கினார்கள். மாஸ்டர் தகேசியுடன், தர்ஷன் பாலா கந்தர் அனுபூதி பாடல்களை வழங்கினார்கள். முன்னதாக பாலா பீட நிர்வாகி மோகன் ஜி அன்னை பாலாவுக்கு அபிஷேகம், ஆராதனை செய்தார். நாகலட்சுமி எழில்மணி அனைவருக்கும் குங்குமப்பிரசாதம், பாலா படம் வழங்கினார். குருஜி பாபாஜி பாலா பாராயணம் செய்தார். இறுதியாக செயலர் முரளிதரன் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்