விழா மேடை, பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சிக்கு வருகிற26-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதையொட்டி விழா மேடை, பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

Update: 2023-07-21 18:47 GMT

திருச்சிக்கு வருகிற26-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதையொட்டி விழா மேடை, பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

டெல்டா மண்டலம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தை மண்டலம் வாரியாக நடத்த தி.மு.க. திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக டெல்டா மண்டலத்திற்கான கூட்டம் வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) திருச்சியில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை வடக்கு, தஞ்சை மத்தியம், தஞ்சை தெற்கு, திருச்சி தெற்கு, மத்தியம், வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, வடக்கு ஆகிய டெல்டா மண்டலத்திற்கான தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதனையொட்டி திருச்சி ராம்ஜிநகர், பகுதியில் விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கேர் கல்லூரியில் விவசாயிகளுக்கான வேளாண் சங்கமம் 2023 என்ற தலைப்பின் கீழ் மாநில அளவிலான கண்காட்சி நடைபெற உள்ளது. இதிலும் முதல் அமைச்சர் பங்கேற்க உள்ளார். இங்கு நடைபெறும் முன்னேற்பாடு பணிகளையும் அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதல்-அமைச்சர்திருச்சி வருகை

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந்தேதி காலை 11 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தர உள்ளார். அதனைத் தொடர்ந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்க மூத்த வழக்கறிஞர்கள் முதல்-அமைச்சரை சந்திக்க உள்ளனர். பின்னர் திருச்சி ராம்ஜி நகரில் அன்று மாலை 4 மணிக்கு டெல்டா மண்டலத்தை சேர்ந்த 2-ம் நிலை தேர்தல் பூத் கமிட்டி அலுவலர்களுடன் முதல்-அமைச்சர் கலந்துரையாடுகிறார். அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் 27-ந்தேதி காலை 9 மணிக்கு கேர் கல்லூரியில் விவசாயிகளுக்கான, வேளாண் சங்கமம் என்ற தலைப்பில் மாநிலம் அளவிலான கண்காட்சியை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

விவசாய கண்காட்சி

முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க விவசாயிகள் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் விவசாயிகள் இன்றைய நவீன காலக்கட்டத்தில் எப்படி விவசாய உபகரணங்களை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவது என்பது குறித்த பல்வேறு உபகரண கண்காட்சிகள் இடம்பெறுகிறது.

இதுவரை தனியார் நிறுவனங்கள் மட்டுமே நடத்திய இதுபோன்ற கண்காட்சியை முதல் முறையாக தமிழக அரசு நடத்துகிறது. அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுடன் கலந்துரையாடி சிறப்புைரயாற்றுகிறார். பின்னர் மாலையில் முதல்-அமைச்சர் திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வில் மாநகர செயலாளர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார், ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா, கவுன்சிலர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்