டாஸ்மாக் குறித்த அமைச்சர் துரைமுருகன் கருத்து- பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக ஒழித்து, போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

Update: 2024-06-29 16:32 GMT

தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அமைச்சர் துரைமுருகன் டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என்று, சட்டசபையில் முதல்-அமைச்சரை வைத்துக் கொண்டே கூறுவது மிக, மிக கண்டனத்துக்குரியது. டாஸ்மாக் கடைகளில் கிக் இல்லை என்றால், அந்த அளவுக்கு தரம் இல்லாத ஒரு டாஸ்மாக்கை தமிழக அரசு நடத்துகிறது. இந்த தரம் இல்லாத அரசு, தன் நிலையை தாங்களே ஒப்புக்கொண்டுள்ளது என்பது தான் இதற்கு அர்த்தம்.

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக ஒழித்து, போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியை மக்களுக்கு கொடுத்து, கோடிகளை நீங்கள் சம்பாதிக்க கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றுவது ஏற்புடையதல்ல. எனவே, தமிழகத்தில் ஏற்பட்ட இத்தனை இறப்புகளுக்கும், தற்போதைய தமிழக அரசுதான் காரணம் என்பதை அமைச்சர் துரைமுருகன் தன் வாயினால் ஒப்புக் கொண்டார். ஒரு மூத்த அமைச்சரின் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்