60 மாணவர்களை ஐதராபாத் அழைத்து சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 60 மாணவர்களை ஐதராபாத் அழைத்து சென்றார்.

Update: 2023-08-29 19:47 GMT

திருச்சி விமான நிலையத்தில் நேற்று காலையில் தேசியக் கல்லூரி மாணவர்கள் 150 பேர் விளையாட்டு தினம் கொண்டாடினர். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் 60 பேரை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஐதராபாத் அழைத்து சென்றார். பின்னர் ஐதராபாத்தில் நடந்த மேற்படிப்பிற்கான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்