மெட்ரோ பணி: அடையாறில் இன்று ஒருநாள் போக்குவரத்து மாற்றம்

திருவான்மியூர் சிக்னலில் இருந்து வரும் வாகனங்கள் மகாத்மா காந்தி சாலையில் வலதுபுறம் திரும்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-09-14 02:23 GMT

கோப்புப்படம் 

சென்னை,

மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக அடையாறில் இன்று ஒருநாள் மட்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தினர் அடையாறு டெலிபோன் எக்சேஞ்ச் அருகே மெட்ரோ ரெயில் பணியினை மேற்கொள்ள உள்ளனர். இதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

டாக்டர் முத்துலட்சுமி சாலையில் இருந்து திருவான்மியூர் நோக்கி வரும் வாகனங்கள் அடையாறு தொலைபேசி நிலையத்தில் தடைசெய்யப்பட்டு மாறாக, அவர்கள் காமராஜ் அவென்யூ 2-வது குறுக்குத் தெரு (இடதுதிருப்பம்) - சாஸ்திரிநகர் 1-வது பிரதானசாலை (திருப்பத்தில்) - மகாத்மாகாந்தி சாலை (வலதுதிருப்பம்) - லட்டிஸ் பாலம் சாலை (இடதுதிருப்பம்) வழியாக செல்லலாம். இந்த பாதையானது ஒரு வழி போக்குவரத்தாக செயல்படும்.

திருவான்மியூர் சிக்னலில் இருந்து வரும் வாகனங்கள் மகாத்மா காந்தி சாலையில் வலதுபுறம் திரும்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவான்மியூரில் இருந்து அடையாறு மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்களுக்கு தடை இல்லை வழக்கம் போல் செயல்படும். வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்