சாராயம் விற்றவர் கைது

ராமநத்தம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-13 18:45 GMT

ராமநத்தம், 

ராமநத்தம் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் பட்டாகுறிச்சி கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (வயது 43) என்பவர் தனது வீட்டில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 15 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்