கூலித்தொழிலாளி தற்கொலை

கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்

Update: 2023-06-18 18:45 GMT

எஸ்.புதூர் அருகே உள்ள எஸ்.உத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவாச்சமுத்து மகன் கருப்பையா (வயது 48) கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்திற்கு செல்வதாக கூறி சென்ற கருப்பையா வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடிச்சென்று பார்த்த போது தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த புகாரின் பேரில் புழுதிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பையா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்