கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் எம்.எஸ்.எஸ்.சி குழுமம் நடத்திய பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கபடி போட்டியில் முதல் பரிசை வென்றனர். அதேபோல் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் கபடி போட்டியில் 2-வது இடத்தையும் பிடித்து பரிசை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் குருவலிங்கம், நிர்வாக அதிகாரி அழகர்சாமி, முதல்வர் கமலா, துணை முதல்வர் சித்ரா மகேஸ்வரி ஆகியோர் பாராட்டினர்.