நர்சிங் மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை

நர்சிங் மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-21 18:12 GMT

வடகாடு அருகே நல்லாண்டார்கொல்லை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் வெண்ணிலா (வயது 19). இவர், ஆலங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெண்ணிலாவை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்சிங் மாணவியை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்