தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் குஷ்பு

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2024-08-14 15:53 GMT

சென்னை,

தேசிய மகளிர், குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். குஷ்புவின் ராஜினாமாவை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏறுக்கொண்டதாக அறிவித்துள்ளது.

2023 பிப்ரவரி 27-ம் தேதி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பாஜக பிரமுகர் குஷ்பு நியமிக்கப்பட்டார். தற்போது பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் குஷ்பு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்