கானாடுகாத்தான் பேரூராட்சி கூட்டம்

கானாடுகாத்தான் பேரூராட்சி கூட்டம் நடந்தது.

Update: 2022-05-26 20:08 GMT

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் பேரூராட்சி கூட்டம் அதன் தலைவர் ராதிகா ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது, துணைத்தலைவர் சோலைராஜா முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ரமேஷ் வரவேற்றார். உறுப்பினர்கள் ஜெய்கணேஷ், கற்பகம் அன்புக்கரசி, கருப்பையா, சுரேகா, வசந்தி, பாண்டிச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளின் தேவைகள் குறித்து கோரிக்கைகள் விடுத்து பேசினர். தலைவர் ராதிகா ராமச்சந்திரன் பேசுகையில், வார்டு உறுப்பினர்களின் கோரிக்கைகள் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு அத்தியாவசிய பணிகளுக்கு முன்னுரிமைகொடுத்து பணிகள் மேற்கொள்ளப்படும் சுற்றுலா நகரமான இப்பகுதியை தூய்மையாக பராமரிக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். பாலம் பராமரிப்பு பணிகள், மற்றும் ரூ.15 லட்சம் திட்ட மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்