காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

Update: 2022-10-16 18:45 GMT

தேய்பிறை அஷ்டமியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

தேய்பிறை அஷ்டமி

கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலபைரவ ஹோமம் நடந்தன. தொடர்ந்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை நடைபெற்றது.

பின்னர் காலபைரவர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல், 12 மணிக்கு, காலபைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

பக்தர்கள் வழிபாடு

இதேபோல், கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சூரன் குட்டை தட்சிண காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்