சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 3 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

Update: 2023-04-12 18:45 GMT

சிவகங்கை,

சிவகங்கை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சோனை முத்து (வயது 52) மாற்றுத்திறனாளி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு அருகில் உள்ள கிராமத்தில் நண்பர் ஒருவரை பார்க்க அவருடைய வீட்டிற்கு சென்றார். வீட்டில் அவருடைய 16 வயது மகள் மட்டும் இருந்துள்ளார். அப்போது சோனை முத்து தன்னுடைய செல்போனில் வைத்திருந்த ஆபாச படங்களை அந்த சிறுமியிடம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்தாராம். இது தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் சோனை முத்துவை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர் இந்த வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சரத் ராஜ் குற்றம் சாட்டப்பட்ட சோனை முத்துவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் , ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்