துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

ஆரணி டவுன் காவல் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-12-08 13:30 GMT

ஆரணி

ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் இன்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் சம்பந்தமாக தகவல்களை கேட்டறிந்தார்.

உடனடியாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க வேண்டும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோருக்கு அறிவுறுத்தினார்.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்