சுதந்திர தினம்: நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

சுதந்திர தினத்தையொட்டி நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

Update: 2024-08-12 14:22 GMT

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, செங்கல்பட்டு, நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, நெல்லையில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 18-ந்தேதி ஆகிய நாட்களில் இரவு 10.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06020) மறுநாள் காலை 11 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.

மறுமாா்க்கமாக (வண்டி எண்: 06019) செங்கல்பட்டில் இருந்து வருகிற 14 மற்றும் 19-ந்தேதி ஆகிய நாட்களில் மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.50 மணிக்கு நெல்லையை சென்றடையும். இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், கடலூா் துறைமுகம், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூா் வழியாக செங்கல்பட்டு வரை இயக்கப்படும்.

இதேபோல், நாகா்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு வருகிற 18 மற்றும் 25-ந்தேதி ஆகிய நாட்களில் இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06012) அடுத்த நாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து (வண்டி எண்: 06011) ரெயில் வருகிற 19 மற்றும் 24-ந்தேதி ஆகிய நாட்களில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 3.45 மணிக்கு நாகா்கோவிலை சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்