மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை

வேடசந்தூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

Update: 2022-05-28 05:37 GMT


திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் கூட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 42) கூலித்தொழிலாளி.

இவரது மனைவி கடந்த ஆண்டு தீராத வயிற்றுவலி காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில்,மனைவி தற்கொலை செய்ததில் இருந்து அவரது நினைப்பாகவே இருக்கிறது என்று கூறி வந்துள்ளார்.இந்நிலையில் மிகுந்த சோகத்தில் இருந்த அவர் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.இன்று காலை இதனை பார்த்த அவரது உறவினர்கள் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த வேடசந்தூர் போலீசார் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி இறந்த சோகத்திக் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்