தொடர் கனமழை: வால்பாறையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தொடர் கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-17 15:03 GMT

கோப்புப்படம் 

கோவை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சாரல் மழை பெய்து வருவதோடு, அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

அந்த வகையில் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும் கோவை மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (18.07.2024) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்