கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-28 19:28 GMT

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதுக்கோட்டை மாவட்ட கிளை சார்பில் புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று தர்ணா நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜபரூல்லா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஹேமலதா தர்ணாவை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, மாநில செயலாளர் தமிழ்மணி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்விடுப்பு, வருங்கால வைப்பு நிதி, வட்டி குறைப்பு உள்ளிட்ட கொரோனா தொற்று காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்